follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய முறையான வேலைத்திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய முறையான வேலைத்திட்டம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக நியமித்துக் கொள்வோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பநிலையையும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவையும், அதன் பிரதான சூத்திரதாரியையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுப்போம்.

எமது நாட்டின் கொடிய நோயாக மாறி இருக்கின்ற போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக ஒழிப்பதற்கு ராணுவத்தினரின் பூரண பங்களிப்பையும் பெற்றுக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சக்தி இன்று(10) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை ஒருமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து உயிரை துச்சமாக மதித்து தமது கடமைகளை முன்னெடுக்கின்ற முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், உள்ளிட்ட ராணுவத்தினரை அரசியல் காலங்களில் அரசியல் கால்பந்துகளாக நடத்தப்படுகின்றனர்.

தேர்தல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அனாதைகளாக கைவிடப்படுகின்றனர். பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முப்படையினரும் பொலிஸார், பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களினதும் உரிமைகள் குறித்து குரல் எழுப்பியதோடு உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்கின்றது. 21 ஆம் திகதிக்கு அந்த செயற்பாட்டிற்கு 220 இலட்சம் மக்களின் ஆசீர்வாதத்தோடு தீர்வினையும் பதிலையும் வழங்குகின்ற காலம் ஆரம்பமாகும். 48 மணித்தியாலத்திற்குள் முப்படையினரும் பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவோம்.
அதன் ஊடாக குறிப்பிட்ட காலத்துக்குள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...