follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1தேர்தல் நடவடிக்கை - நாளை முதல் இரு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் நடவடிக்கை – நாளை முதல் இரு பாடசாலைகளுக்கு விடுமுறை

Published on

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (11) முதல் திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக விபுலானந்த மகா வித்தியாலயம் பயன்படுத்தப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மூடப்படும் என மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...