follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மக்கள் அலை யாருக்கு என்பதை கூட்டத்தைப் பார்த்து தீர்மானிக்காதீர்கள் - திலித்

மக்கள் அலை யாருக்கு என்பதை கூட்டத்தைப் பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித்

Published on

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

தொழில்முனைவோரான திலித் இன்று (11) காலை சர்வசன அதிகார கூட்டணியின் பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழிலதிபரும், சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;

“அதிக நம்பிக்கையுடன் கூடிய மாற்றத்தை எதிர்பார்த்திருந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.

தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டபடி, எங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்தோம். அதனால்தான் பேரூந்து மேனேஜர்கள் மூலம் மக்கள் வெள்ளத்தினை திரட்டவோ, ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தவோ எமக்கு தேவையிருக்கவில்லை.

அந்தக் கூட்டங்களுக்கு வந்தவர்கள் வாக்களிப்பவர்கள் என்று இன்று யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால், ஒரு குழுவாக நீங்கள் நாடு முழுவதும் கூட்டங்களுக்குச் செல்ல ஒரு சிறிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

எனவே, இந்தக் கூட்டத்தைப் பார்த்து அலை எங்கே என்று முடிவு செய்ய வேண்டாம் என்று மக்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இறுதி ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.

மக்கள் அந்த பெட்டியின் முன்னே சென்று தங்கள் மனசாட்சிப்படி புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி முடிவெடுப்பார்கள் என நாம் நம்புகிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...