follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2நட்டஈடாக 100 கோடி கோரி, திஸ்ஸ மீது ஹரிணி வழக்கு

நட்டஈடாக 100 கோடி கோரி, திஸ்ஸ மீது ஹரிணி வழக்கு

Published on

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று(11) நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைத்தவுடன் கண்டியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரவை நிறுத்துவதாக தான் கருத்து தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வெறுக்கத்தக்க இழிவான அறிக்கையினால் அரசியல்வாதி என்ற வகையில் தாம் கட்டிக்காத்து வரும் நற்பெயருக்கும் புகழுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்..

100 கோடி ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தாக்கல் செய்த இந்த மனுவில் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...