follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2நட்டஈடாக 100 கோடி கோரி, திஸ்ஸ மீது ஹரிணி வழக்கு

நட்டஈடாக 100 கோடி கோரி, திஸ்ஸ மீது ஹரிணி வழக்கு

Published on

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று(11) நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைத்தவுடன் கண்டியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரவை நிறுத்துவதாக தான் கருத்து தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வெறுக்கத்தக்க இழிவான அறிக்கையினால் அரசியல்வாதி என்ற வகையில் தாம் கட்டிக்காத்து வரும் நற்பெயருக்கும் புகழுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்..

100 கோடி ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தாக்கல் செய்த இந்த மனுவில் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...