follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2கட்சி மாறும் அரசியல் அமைப்பை நிறுத்துவதற்கு புதிய சட்டங்கள் - நாமல்

கட்சி மாறும் அரசியல் அமைப்பை நிறுத்துவதற்கு புதிய சட்டங்கள் – நாமல்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் இரத்துச் செய்தால் டொலரின் பெறுமதி மீண்டும் உயரக்கூடும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பகிரங்க விளக்கமளிக்குமாறு அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் டொலரை நிரந்தரமாக பலப்படுத்தி புதிய பொருளாதார வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்து செய்த அனைத்து மக்களுக்கும் தமது அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் நட்டஈடு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டார்.

தமது அரசாங்கத்தின் கீழ் கட்சி மாறும் அரசியல் அமைப்பை நிறுத்துவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...