follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்சிம்பாப்வேயில் கடும் வறட்சி - 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

Published on

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் நமீபியாவில் 83 யானைகளை கொல்வதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சியை வழங்குவதற்கும் எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்றுகிறது.

ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மொத்த யானைகளில் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான யானைகள் தென்னாப்பிரிக்க பகுதிகளில் தான் வாழ்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...