follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

Published on

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கைகள் அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றியினால் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இன்று (23) டொலருக்கு நிகரான இலங்கைப் பத்திரங்கள் 3.1 சென்ட்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது, இது இரண்டு வருடங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும்.

எவ்வாறாயினும், இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும், அனைவருடனும் இணைந்து செயற்பட தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்ததை அடுத்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக அந்தச் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2029 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் இந்த காலாண்டில் சுமார் 15 சதவீதம் குறையும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று புளூம்பெர்க் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...