follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP1கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

Published on

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது நபருக்கு கடந்த வாரம், குரங்கு அம்மை பாதிப்பு, பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய வகை குரங்கு அம்மை கிளேட் 1, 2 ஆகிய வகைகளை விட ஆபத்தானது என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...