follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில் உருவாகும் புதிய கூட்டணி போட்டியிட வேண்டும் என்பதும் அதில் ஒரு நிபந்தனை.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றைய நிபந்தனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...