follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2"செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு"

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”

Published on

பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் தாம் பேசியிருந்ததாகவும் பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலர் புண்ணாக்கு சாப்பிடுவதாகவே சொல்லுவார்கள். இவ்வாறானதொரு நாட்டில் அரசியல் செய்வது புரியாத செயல் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பது உறுதியாகத் தெரியவந்தால்தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ஊழல் நெருக்கடிகள் தீர்ந்தால்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் பங்கேற்பது உறுதியாகும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...