follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட 1955 அல்லது 071 25 95 555 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பஸ் பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை எனவும் பெரும்பாலான பஸ்களில் ஆரம்ப பயணக் கட்டணத்துக்கு ஏற்ப சரியான வகையில் மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 4.24 சதவீதமாக பஸ் கட்டணம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...