follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Published on

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வைத்திருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானிய தாக்குதல்களினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (01) இரவு பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும், அமெரிக்காவின் எதிர் ஏவுகணை நடவடிக்கையும் ஏவப்பட்ட பல ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.

காஸா பகுதி மற்றும் லெபனான் மீது தொடர்ச்சியாக வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (01) பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

மக்கள்தொகை கொண்ட தலைநகரான டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...