follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"தவறான முடிவுகளால் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றது உண்மை"

“தவறான முடிவுகளால் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றது உண்மை”

Published on

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதன் தோல்விக்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த சில தவறான தீர்மானங்களே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினை விட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பு பலம் வாய்ந்தது எனத் தெரிவித்திருந்தார்.

“.. இப்போதுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு 50% வாக்குகள் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இன்று அநுர குமார திசாநாயக்க இந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்க மாட்டார்.

மேலும், ஜேவிபி ஆனது தேசிய மக்கள் சக்தியாக மாறியது. சிவப்பு இளஞ்சிவப்பாகியது. சின்னமாக இருந்த மணியை திசைகாட்டியாக்கி, மக்கள் செல்வாக்குள்ள நபர்களை மக்கள் மத்தியில் இறக்கி ஒரு அரசியல் பிரச்சாரத்தினை முன்னெடுத்து சென்றனர். அது எங்கள் பக்கத்தில் இருக்கவில்லை. எம்முடன் இருந்த சிலரை மக்களுக்கு பிடிக்கவில்லை அதுவும் உண்மை, அவர்களை மக்கள் விமர்சித்தனர்..”

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதே தமது குழுவின் திட்டமாகும் என அவர் இங்கு தெரிவித்தார்.

நேற்றிரவு ஒளிபரப்பான நெத் எப்எம் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷத சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...