follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் - இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

Published on

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில், 4 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது பிரசார செலவு அறிக்கையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் தமது பிரசார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கைகள் வழங்கப்பட்டாலும் அது சட்டவிரோதமானதாக கருதப்பட்டு தண்டிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...