follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉள்நாடுபடப்பிடிப்பு ஆரம்பம் - மலையக ரயில் சேவை மட்டு

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

Published on

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரை, காலை 7.30 முதல் பிற்பகல் 5.30 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை – இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...