follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபடப்பிடிப்பு ஆரம்பம் - மலையக ரயில் சேவை மட்டு

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

Published on

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரை, காலை 7.30 முதல் பிற்பகல் 5.30 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை – இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...