follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2பொதுத் தேர்தலில் நாமல் போட்டியிட மாட்டாராம்

பொதுத் தேர்தலில் நாமல் போட்டியிட மாட்டாராம்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் நம்பகமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இத்தேர்தலுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட அணித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானகவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் ஒரு கட்சி என்ற ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அவரை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது என அக்கட்சியின் அரசியல் சபை மற்றும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட மாட்டார் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...