follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1இறக்குமதி சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி நீடிப்பு

இறக்குமதி சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி நீடிப்பு

Published on

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது.

அதன் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அந்த வரிகளை அறவிடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...