follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉள்நாடுதொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

Published on

நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ் உள்ளிட்ட நெதர்லாந்து தூதுக்குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

நெதர்லாந்தில் உள்ள Wageningen பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Wageningen University & Research) கடந்த 7 ஆண்டுகளாக உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையான பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.

விவசாயம், விவசாயம்-சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு திட்டங்களை ஆரம்பிக்க மேற்படி பல்கலைக்கழகம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை அறிந்துகொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் விளைச்சல் மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்புக்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.

இதன்படி, இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதுடன் தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்கவும் நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...