follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபுதிய போக்குவரத்து திட்டம் - தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்றம்

புதிய போக்குவரத்து திட்டம் – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்றம்

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளுக்கும் இடையில் இன்று (21) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த முறையை புறக்கணிக்கும் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், கடைகளை தற்காலிகமாக மூடவும் பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

எனினும், தற்காலிகமாக கடைகளை மூடுவதற்கு எடுத்த தீர்மானித்தால், காலையில் மாம்பழம் விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள், மிகுந்த சிரமப்பட்டு கொண்டு வரும் மாம்பழங்களை விற்பனை செய்ய இடமில்லாததால், லொறிகளிலும், கடைகளுக்கு அருகில் தரையிலும் மாம்பழங்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...