follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை கடிதம் ஒன்றை (LOD) அனுப்பியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, ​​கோசல விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சருக்குத் தொடர்புடைய நிதி மோசடி குறித்து சூசகமாக தெரிவித்ததாக, முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

SLBFE தலைவர் தனது நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ரூ. 01 பில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.

மேலும், கொரிய E8 வீசா முறை தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

விசா முறையின் கீழ் தாம் நிதி ரீதியான நன்மைகளை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட நற்பெயருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய E8 வீசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்த நபர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLBFE வெளிப்படுத்தியதை அடுத்து மனுஷ நாணயக்கார இந் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...