follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

Published on

இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

“பள்ளிவாயல்களில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...