follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

Published on

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், போஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை, மிளகாய் ரூ. 900 முதல் ரூ.1000 ஆகவும், பச்சை மிளகாய் ரூ. 1000 முதல் ரூ. 1200 ஆகவும், மொச்சை ரூ. 800 முதல் ரூ. 900 ஆகவும், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் மரக்கறிகளின் விலை மிகவும் அதிகரித்து வருவதாகவும், மரக்கறிபயிர்கள் அழிந்து வருவதால் மற்ற ஆண்டுகளை விட மரக்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக நத்தார் பண்டிகை நெருங்கும் போது இந்த மரக்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...