follow the truth

follow the truth

May, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்'Paracetamol' மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?..

‘Paracetamol’ மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?..

Published on

காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பரசிட்டமால் (Paracetamol ) வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பரசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பரசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.

பரசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பரசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...