follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் - ஹேமந்த ஹேரத்

ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் – ஹேமந்த ஹேரத்

Published on

இலங்கையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர், தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் குறித்த ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்தபோது, அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் , விமான நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தங்களுக்கும், உலகில் வேறு நாடுகளுக்கும் முடியாமல் போயுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல மாகாணங்களில் மிகவும் வெப்பமான சூழ்நிலை

தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய நீரிழப்பைத் தடுக்க அதிக தண்ணீர் குடிக்க நடவடிக்கை...

பலஸ்தீனை அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடு

செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். சமீபத்திய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...