follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published on

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபையினால் சுமார் 40 சதவீதமான சலுகைகளை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க முடியும் தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்.

இவ்வாறான பொருளாதார கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...