follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1ஒன்பது வயது சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

ஒன்பது வயது சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்குருவத்தோட்ட, ஹல்தோட்டை, பீதிகமுவ பகுதியைச் சேர்ந்த, ஹொரணை பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியான தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பிள்ளையின் பெற்றோர் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதுடன், சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், குழந்தை சுயநினைவு பெறவில்லை.

பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களின் பலமான வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் அனுமதித்தனர். நான்கு நாட்களுக்குப் பின்னர் நேற்று (22) மாலை சுமார் 4.30 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் பொலிசாருக்கு முறையிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...