follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP12026லிருந்து பரீட்சைகளை வழமையான முறையில் நடாத்த முடியும்

2026லிருந்து பரீட்சைகளை வழமையான முறையில் நடாத்த முடியும்

Published on

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என்றும் கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...