follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரி ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு கடிதம்

ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரி ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு கடிதம்

Published on

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட 15 அவதூறான, பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிட்டமை தொடர்பாக முன்னாள் ஆளுநரின் சட்டத்தரணிகள் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல், கடத்தல்காரர் என்று மீண்டும் மீண்டும் கூறியமை, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொண்டமை, நிலங்களை விற்றமை மற்றும் அரசுக்கு உரித்தான மாமர கன்றுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட 15 பொய்யான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தமக்கு எதிராக முன்வைத்ததாக அந்த கடிதத்தில் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், முன்னாள் ஆளுநருக்கு கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோனுக்கு 100 மில்லியன் ரூபாவினை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நட்டஈடாக செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...