follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉலகம்மோடி - டிரம்ப் தொலைபேசி உரையாடல் - மோடிக்கு டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடல் – மோடிக்கு டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Published on

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர்மோடிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமையன்று, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உறுதியான உரையாடல் நடந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் விரைவில் சந்திக்கலாம் என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்தும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதிக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ள நிலையில், பிரதமர் மோதியுடனான உரையாடலில் டிரம்ப் இரண்டு விஷயங்களை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒன்று, முடிந்தவரை அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும். இரண்டாவதாக, இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம், ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் சமநிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...