follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP2ரணில், நிமல் மற்றும் திலித் ஆகியோர் ஒரே அணியாக...

ரணில், நிமல் மற்றும் திலித் ஆகியோர் ஒரே அணியாக…

Published on

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வ ஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, மேலும் இந்த பிரதிநிதிகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...

வெப்பமான காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின்...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும்...