follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

பிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

Published on

வெளிநாட்டிலிருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து செயல்படும் பிரமிட் முதலீட்டு திட்டம் ஒன்றை இந்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு இந்த நபர் பங்களித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன் கீழ் சுமார் ஐயாயிரம் பேர் இந்த முதலீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...