follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சமல் ராஜபக்ஷ

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சமல் ராஜபக்ஷ

Published on

இன்று கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று (09) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று சமல் ராஜபக்ஷ கூறியபோது பலர் நக்கலாக சிரித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாக சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண்கள் ‘டி-20’ உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

பெண்களுக்கான 'டி-20' உலக கிண்ண அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த போரில் 140 பேர் பலி

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில்...

சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்கும் ஏர் இந்தியா

அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையில், அகன்ற...