follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் - நாமல் கருணாரத்ன

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் – நாமல் கருணாரத்ன

Published on

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் 2,934,310 ரூபாய் கொள்ளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...