follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2தேர்தல் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நீதிமன்றுக்கு

தேர்தல் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நீதிமன்றுக்கு

Published on

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜீவன் தொண்டமான் மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து கூறியதாவது;

“நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனுக்களை சமர்ப்பித்தது. மஸ்கெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை அறிந்த சில குழுக்கள் இது குறித்து மகிழ்ச்சியடைகின்றன.”

“ஆனால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்வோம். பின்னர் மகிழ்ச்சியாக இருந்தவர்களின் மகிழ்ச்சியும் முடிவுக்கு வரும். இந்த உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் சக்தியை முழுமையாகக் காட்ட நடவடிக்கை எடுப்போம்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...