follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் - பிரேம்நாத் சி. தொலவத்த

இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் – பிரேம்நாத் சி. தொலவத்த

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயற்பாடாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் கூறுகையில்;

“இப்போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை இவ்வாறு சுரண்டுவது மிகவும் வருந்தத்தக்கது.

நாங்கள் தற்போது பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டுக் கொள்கிறோம் – ‘நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா?’

இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்னும் ஏன் பாதிக்கப்பட்டவர்கள் நீதியற்ற நிலையில் வைக்கப்படுகின்றனர்?

நான் முன்வைத்த சில கருத்துகள் காரணமாக என்னை அச்சுறுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. எனினும், நாங்கள் சுயநலமற்ற, நியாயமான விமர்சனங்களையே தெரிவிக்கிறோம்.

ஊழல் மற்றும் மோசடியைக் கண்டறியும் முயற்சிகளில் எனும் பெயரில், 323 கொள்கலன்கள் சோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் சித்தாந்தங்களுக்கு விரோதமாகும்.

எனவே, பொய்யான பிரசாரங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மேலும் வலியுறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...