follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

Published on

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,

பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த எஸ்விஇஎஸ் (SVES) ரத்து செய்யப்பட்டது. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. தூதரக உதவிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படை, விமானப்படை, பாதுகாப்புப் படையினர் இஸ்லாமாபாதில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படைப் படையினர் ஒருவாரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முப்படைகளும் தயார்நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...