எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையே மேலதிக விசேட ரயில் சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே மற்றொரு விசேட ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்த ரயில் சேவைகள் மே 9 முதல் 13 வரை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.