follow the truth

follow the truth

May, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகொட்டாஞ்சேனை மாணவி மரணம் - ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Published on

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது பாராளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் எனவும் பலருக்கு முன்பாக மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மாணவி தொடர்பான விவகாரம் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...