follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP1யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

Published on

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன தளத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ரணவிரு சேவை அதிகாரசபையிடம் கையளித்தார். இலங்கை இராணுவத் தலைமையகத்தின் ரணவிரு சேவை அதிகாரசபையின் சார்பாக மேஜர் எரங்க ரத்நாயக்க இது தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த வாகனங்கள் அனுராதபுரம், கம்புறுபிட்டிய மற்றும் பாங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள அபிமங்சல நிலையங்களிலும், அத்திடிய மிஹிந்து செத்மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஆகிய பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் படைவீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.

இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள், ஒரு நிசான் பெற்றோல் ஜீப் வண்டி, ஒரு டொயோட்டா கரீனா கார் மற்றும் ஒரு டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் என்பன இவ்வாறு பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் – கோப் குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது. ஸ்ரீ...

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை...