follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கட, மெகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெகா, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்கு கைதிகளுக்கு இன்று (29) மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் மூன்றாவது கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...