follow the truth

follow the truth

June, 7, 2025
Homeஉள்நாடுகிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

Published on

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது அதிகாரிகள், ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததுடன், வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...