நிறுவன விதிகளை மீறி, கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும், இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.