இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.
சில பிரச்சினைகள் இன்று தீர்க்கப்பட்டதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.