follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉள்நாடுநானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் - “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

Published on

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட odyssey camper விடுதி விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.

அதன்படி, நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள இந்த ரயிலில் ஒரு இரவைக் கழிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும்.

ரயில் பெட்டியில் தயாரிக்கப்பட்ட வசதியான அறையில் ஒரு பெரிய படுக்கை, வெப்பமூட்டும் வசதிகளுடன் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விருந்தினர்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றுப்புற் காட்சிகளை பார்வையிடவும் திறந்தவெளிகள், குளியலறைகள் மற்றும் சூடு நீர் கொண்ட அறைகள் இந்த வசதியில் அடங்கும்.

B&B முறைப்படி, சேவைகளை வழங்கும் இந்த “Odyssey Camper ரயிலில் இரவைக் கழிப்பதன் மூலம், நானுஓயா ரயில் பங்களாவில் அழகான சூழலில் வழங்கப்படும் சுவையான காலை உணவையும் அனுபவிக்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...