follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுநானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் - “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

Published on

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட odyssey camper விடுதி விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.

அதன்படி, நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள இந்த ரயிலில் ஒரு இரவைக் கழிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும்.

ரயில் பெட்டியில் தயாரிக்கப்பட்ட வசதியான அறையில் ஒரு பெரிய படுக்கை, வெப்பமூட்டும் வசதிகளுடன் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விருந்தினர்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றுப்புற் காட்சிகளை பார்வையிடவும் திறந்தவெளிகள், குளியலறைகள் மற்றும் சூடு நீர் கொண்ட அறைகள் இந்த வசதியில் அடங்கும்.

B&B முறைப்படி, சேவைகளை வழங்கும் இந்த “Odyssey Camper ரயிலில் இரவைக் கழிப்பதன் மூலம், நானுஓயா ரயில் பங்களாவில் அழகான சூழலில் வழங்கப்படும் சுவையான காலை உணவையும் அனுபவிக்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...