follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே இன்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...