follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

Published on

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...