follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP2ஆடம்பர சொத்துக்கள் பல அரசியல்வாதிகள் தொடர்பில் CID விசாரணை

ஆடம்பர சொத்துக்கள் பல அரசியல்வாதிகள் தொடர்பில் CID விசாரணை

Published on

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் கூற்றுப்படி, விசாரணைக்கு உட்படுத்தப்படும் அரசியல்வாதிகளில் பல முக்கிய முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிங்கள பத்திரையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரிடமும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது.

சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...