follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Published on

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாகப் பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெக்டெயார் 1.42 நிலப்பரப்புடன் கூடிய மத்திய பேருந்து நிலையம் 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுடன், தினசரி 1500 – 2000 வரையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பாக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜாசக்தி"...

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...