மத்திய கிழக்கின் நிலைமை, இலங்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மதிப்பிட்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்த குழுவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
அத்துடன், இந்த அமைச்சரவை உப குழுவுக்கு உதவுவதற்கான அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது